காஞ்சிபுரம் மாவட்டத்தில் நல்வாழ்வுத் துறை சார்பில்பல்வேறு மருத்துவ கட்டிடங்கள் திறப்பு
காஞ்சிபுரம் :
புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்து தெரிவித்ததாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் ரூ.42.25 கோடி செலவில் பல்வேறு மருத்துவ கட்டிடங்கள் மற்றும் உயர் மருத்துவ உபகரணங்கள் தொடங்கி வைக்கப்பட்டது.
- இதில், ரூ.1.50 கோடி செலவில் 6 நகர்புற நலவாழ்வு மைய கட்டிடங்கள்,
- ரூ.2 கோடி செலவில் 8 துணை சுகாதார நிலைய கட்டிடங்கள்,
- ரூ.2.75 கோடி செலவில் 7 ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் பிரிவு, செவிலியர் குடியிருப்பு மற்றும் கூடுதல் கட்டிடங்கள்,
- ரூ.19.49 கோடி செலவில் காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சீமாங் கட்டிடம், மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு மையம், நோயாளிகள் உடனாளர்கள் காத்திருப்பு அறை,
- ரூ.16.51 கோடி செலவில் – அறிஞர் அண்ணா அரசு நினைவு புற்றுநோய் மருத்துவமனையில், PET CT Scan, எச்.டி.ஆர் அண்மைக் கதிர்வீச்சு சிகிச்சை கருவி, க்ரையோஸ்டாட் ஆய்வக உபகரணம், LMO , மருந்து கிடங்கு அறை, 15 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு
ஆகிய மருத்துவ சேவைகள் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.
அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 மருத்துவமனை கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் காஞ்சிபுரம் தொகுதி திருப்புட்குழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவு கட்டிடம்,
- ரூ.1 கோடி காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் மற்றும்
- நத்தப்பேட்டையில் ரூ.30 இலட்சம் துணை சுகாதார நிலைய கட்டிடத்திற்கான கல்வெட்டினையும்,
- உத்திரமேரூர் ஒன்றியத்தில் ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காக்கநல்லூர் துணை சுகாதார நிலைய கட்டிடம்,
- ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எம்.கண்டிகை துணை சுகாதார நிலைய கட்டிடம்,
- ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னத்தூர் துணை சுகாதார நிலைய கட்டிடம்,
- ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மானாம்பதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம்.
- ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மானாம்பதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் குடியிருப்பு கட்டிடம்.
- ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தண்டலம் துணை சுகாதார நிலைய கட்டிடங்கள்
மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கபட்டுள்ளது.
மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.299.88 கோடி செலவில் 29 மருத்துவ கட்டிடங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
- இவற்றில் ரூ.218.40 கோடி மதிப்பீட்டில் காரப்பேட்டை, அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனைக்கு, தரை மற்றும் 5 தளங்கள் கொண்ட புற்றுநோய்க்கான ஒப்புயர்வு மைய கட்டிடம்,
- ரூ.22.60 கோடி மதிப்பீட்டில் லினியர் அசிலேட்டர் இயந்திரம், ரூ.8.10 கோடி மதிப்பீட்டில் எம்.ஆர்.ஐ இயந்திரம், ரூ.2.43 கோடி மதிப்பீட்டில் சி.டி. ஸ்கேன் இயந்திரங்களும்,
- ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், கட்டண பிரிவு மற்றும் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் பிள்ளையார்பாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம்,
- ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் கம்மராஜபுரம் துணை சுகாதார நிலைய கட்டிடம், ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் நத்தப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடத்திற்கான பணிகளும்,
- திருப்பெரும்புதூர் தொகுதியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம்,
- ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் மாங்காடு (ரகுநாதபுரம்) நகர்புற துணை சுகாதார நிலையம்,
- ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் எழிச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம்,
- ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் மொளச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம்,
- ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் மாங்காடு துணை சுகாதார நிலைய கட்டிடம்,
- ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் மதுரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம்,
- ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் தண்டலம் துணை சுகாதார நிலைய கட்டிடம்,
- ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் குன்றத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம்
- ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் குண்டுபெரும்பேடு துணை சுகாதார நிலைய கட்டிடத்திற்கான பணிகளும்,
- உத்திரமேரூர் தொகுதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில், புதிய கட்டிடம்,
- ரூ.10 கோடி மதிப்பீட்டில் வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம்,
- ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் கிளக்கடி துணை சுகாதார நிலைய கட்டிடம்
- ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் ஒழையூர் துணை சுகாதார நிலைய கட்டிடம்
- ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் நீலமங்கலம் துணை சுகாதார நிலைய கட்டிடம்
- ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் ஊத்துக்காடு துணை சுகாதார நிலைய கட்டிடத்திற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இதனை தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மருந்து பெட்டகத்தினையும் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் தொகுதி எம்பி .க.செல்வம், உத்திரமேரூர் எம் எல் ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ வக்கீல்.எழிலரசன் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை ஆ.மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் ஆர்.கே.தேவேந்திரன், மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் நித்தியா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழு துணைத்தலைவர் திவ்வியப்பிரியா இளமது, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் த.ரா.செந்தில், திருப்புட்குழி வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி, ஒன்றிய செயலாளர் பி எம் குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் எம் எஸ் சுகுமார், ஒன்றிய கவுன்சிலர் ராம் பிரசாத், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் தமிழ்ச்செல்வன் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments