Breaking News

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக காஞ்சிபுரம் சுகாதார அலுவலர் கைது

 


காஞ்சிபுரம் :

சரவணன் என்பவர் குடிநீர் வியாபாரம் செய்வதற்கான சட்டபூர்வமான அனுமதி பெற மாநகராட்சியை அணுகியிருந்தார். அந்த நேரத்தில் சுகாதார அலுவலர் பிரகாஷ், சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.


சரவணன், லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாமல் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, போலீஸôர் திட்டமிட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.

ரசாயன பூசப்பட்ட ரூ.5 ஆயிரம் ரூபாயை சரவணன், பிரகாஷிடம் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான போலீஸார் அதிவேகமாக வந்து பிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Thank you for your comments