மாநில இளைஞரணி 3-வது மண்டல சிறப்பு ஆலோசனைக் கூட்டம்
காஞ்சிபுரம் :
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநில இளைஞரணி துணை செயலாளரும் மண்டல பொறுப்பாளருமான திரு. பிரபு கஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் திரு. அப்துல் மாலிக் முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு. யுவராஜ் வரவேற்பு உரையாற்றினார்.
இந்நிகழ்வில்,
-
புதுச்சேரி மாநில இளைஞரணி அமைப்பாளர் சம்பத் MLA,
-
காஞ்சிபுரம் தெற்கு மற்றும் வடக்கு
-
திருவண்ணாமலை வடக்கு, தெற்கு
-
ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர்
-
புதுச்சேரி மாநிலம்
ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
![]() |
முக்கிய ஆலோசனைகள்:
-
கிளை மற்றும் வார்டு அளவில் புதிய இளைஞரணி நிர்வாகிகளை தேர்வு செய்து செயல்படுத்தல்
-
“இல்லம் தோறும் இளைஞரணி” திட்டத்தின் செயல்பாடு
-
சமூக வலைத்தளங்களை திறமையாக கையாளும் வழிமுறைகள்
-
திமுக வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பணிகள்
-
நடைமுறை அனுகுமுறைகள் குறித்த ஆலோசனைகள்
கலந்து கொண்ட முக்கியத் தலைவர்கள்:
இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மணி, பால்ராஜ், சஞ்சய் காந்த், ஆண்ட்ரூ சிரில் ராஜ், அருள்முருகன், யுவராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வு முடிவில், காஞ்சிபுரம் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் திரு. சுகுமார் நன்றி உரையாற்றினார்.
No comments
Thank you for your comments