Breaking News

செய்தியாளர் பயணம் : புதிய மாநகராட்சி அலுவலக கட்டிட பணியை கலெக்டர் கலைசெல்வி மோகன் ஆய்வு


காஞ்சிபுரத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் புதிய மாநகராட்சி அலுவலக கட்டிட பணியினை இன்று (06.03.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட நிகழ்ச்சி செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.


காஞ்சிபுரத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் புதிய மாநகராட்சி அலுவலக கட்டிட பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு,  ஆய்வு மேற்கொண்டு, கட்டிட பணிகளை விரையில் கட்டி முடிக்க அறிவுறுத்தினார். 

பின்பு மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு இயங்கிவரும் இராஜாஜி காய்கறி சந்தையினை பார்வையிட்டு, சந்தையில் உள்ள குடிநீர் வசதிகள், கழிப்பிட வசதிகள் ஆய்வு மேற்கொண்டு, சந்தையினை தூய்மையாக வைத்து கொள்ள வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

 பின்பு மாநகராட்சிக்குட்பட்ட திருக்காலிமேட்டில் உள்ள “முதல்வர் மருந்தகத்தை பார்வையிட்டு, மருந்தகத்திலுள்ள மருந்துகளின் இருப்பு விவரங்கள் குறித்து கேட்டறிந்து, பயன்பாட்டில் வைக்கப்பட்டிருந்த மருந்துகளை  ஆய்வு செய்து,   திருக்காலிமேட்டில் இயங்கிவரும் நியாயவிலைக்கடையினை  பார்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருள்களின் தரத்தையும், இருப்பு பதிவேட்டினையும் ஆய்வு மேற்கொண்டு,  ஊர்ப்புற நூலகத்தையும், நூலகத்திலுள்ள புத்தகங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

 இவ் ஆய்வின் போது   கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் திருமதி.பா.ஜெயஸ்ரீ, மாநகராட்சி பொறியாளர் திரு.கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments