செய்தியாளர் பயணம் : புதிய மாநகராட்சி அலுவலக கட்டிட பணியை கலெக்டர் கலைசெல்வி மோகன் ஆய்வு
காஞ்சிபுரத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் புதிய மாநகராட்சி அலுவலக கட்டிட பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, கட்டிட பணிகளை விரையில் கட்டி முடிக்க அறிவுறுத்தினார்.
பின்பு மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு இயங்கிவரும் இராஜாஜி காய்கறி சந்தையினை பார்வையிட்டு, சந்தையில் உள்ள குடிநீர் வசதிகள், கழிப்பிட வசதிகள் ஆய்வு மேற்கொண்டு, சந்தையினை தூய்மையாக வைத்து கொள்ள வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
இவ் ஆய்வின் போது கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் திருமதி.பா.ஜெயஸ்ரீ, மாநகராட்சி பொறியாளர் திரு.கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments