அனைவரும் மஞ்சப்பை பயன்படுத்தப் பழகிக் கொள்வோம் - காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவுறுத்தல் Manja Pai
காஞ்சிபுரம், பிப்.22:
காஞ்சிபுரம் அருகே நத்தப்பட்டையில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெகிழி கழிவு சேகரிப்பு முகாம் நடைபெற்றது.முகாமை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தொடக்கி வைத்து நெகிழிப் பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
பின்னர் அவர் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி பேசியது.. பொதுமக்களும், வியாபார பெருமக்களும் அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை உபயோகப்படுத்தி தூக்கி எறியக்கூடிய நெகிழிப்பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நெகிழிகளால் ஏற்படும் தீமைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
சுற்றுச்சூழலுக்குகந்த மாற்றுப் பொருட்களை முக்கியமாக மஞ்சப்பை பயன்படுத்துவதை அனைவரும் விருப்பமாக்கி கொள்ள வேண்டும் என்றும் பேசினார்.
நெகிழி கழிவு சேகரிப்பு முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,சார் ஆட்சியர் ஆஷிக் அலி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சத்யா, மாநகராட்சி ஆணையாளர் வே.நவேந்திரன்,மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் புருஷோத்தமன் மற்றும் உதவி சுற்றுச்சுழல் பொறியாளர்களும்,சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments