காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் திறனறிவுப் போட்டிகள்
காஞ்சிபுரம்,பிப்.22:
காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பில் டெக் பிளாஸ்ட் 2025 என்ற பெயரில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான திறனறிவுப் போட்டிகள் நடைபெற்றது.20க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
சிஸ்டம் பிளஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மிடில் இன்டெக்ரேஷன் துறையின் தலைவர் ராமராஜன் கணினி அறிவியலின் வளர்ச்சி என்ற தலைப்பில் பேசினார். தகவல் தொழில் நுட்பம், பொது அறிவு உள்ளிட்ட தலைப்புகளில் திறனறிவுப் போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளின் ஒட்டு மொத்த பரிசினை வென்ற காஞ்சிபுரம் வேலம்மாள் போதி பள்ளி மாணவருக்கு கணினி அறிவியல் துறையின் கையேட்டினை கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் வழங்கி பாராட்டினார்.
இதனைத் தொடர்ந்து திறனறிவுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிங்கப்பூரை சேர்ந்த கிராஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு மேலாளர் எம்.ஜெய்கணேஷ் கோப்பை மற்றும் நினைவுப்பரிசுகளை வழங்கினார்.நிறைவாக கல்லூரியின் கணினி அறிவியல் துறையின் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
No comments
Thank you for your comments