Breaking News

காஞ்சிபுரத்தில் அரசு பள்ளி கூடுதல் வகுப்பறை அடிக்கல் நாட்டு விழா-காஞ்சி எம்எல்ஏ பங்கேற்பு

காஞ்சிபுரம்  :

காஞ்சிபுரத்தில் உள்ள கா.மு. சுப்புராய முதலியார் அரசு  ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட பள்ளி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 


இதை எடுத்து காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ வக்கீல் எழிலரசன்  அரசுக்கு பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில் பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட நபார்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டது. 

இதன் அடிக்கல் நாட்டு விழா  காஞ்சிபுரம்  பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ வக்கீல் ஏழிலரசன் தலைமை தாங்கி நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 94.24 லட்சத்தில் 4- வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜையை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 

இதில் பள்ளி தலைமை ஆசிரியர் விநாயகம், முன்னாள் நகராட்சித் தலைவர் சன்பிராண்ட ஆறுமுகம் மற்றும் பொதுப்பணித்துறை உதவிசெயற் பொறியாளர் சோமசுந்தரம் முன்னாள் மாவட்ட ஆளுநர் அன்பு, மற்றும்  ஒன்றிய கவுன்சிலர் ராம் பிரசாத், பகுதி செயலாளர் வெங்கடேசன், வட்ட செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments