Breaking News

காஞ்சிபுரத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், பிப்.21:

காஞ்சிபுரம் மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


காஞ்சிபுரம் மாவட்ட தமிழக மக்கள் முன்னைற்றக் கழகம் சார்பில் மாவட்டஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள காவலான் கேட் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.கண்ணன் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் மதன்குமார், மாவட்ட மகளிர் அணியின் தலைவி மும்தாஜ்,மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளிக்குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் போதுமான பாதுகாப்பு வழங்கிட வேண்டும்,பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளர் சிவ.புருஷோத்தமன்,மாவட்ட பொருளாளர் வாய்சன் ஆகியோர் உட்பட கட்சியின் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments