காஞ்சிபுரத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாம்
காஞ்சிபுரம், பிப்.20:
காஞ்சிபுரம் தலைமை அஞ்சல் அலுவலகமும்,மாவட்ட காசநோய்ப்பிரிவும் இணைந்து தலைமை அஞ்சலக அலுவலகத்தில் காசநோய் விழிப்புணர்வு முகாமை நடத்தினார்கள். அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.அருள்தாஸ் தலைமை வகித்தார்.
துணை இயக்குநர்(காசநோய்ப்பிரிவு)காளீஸ்வரி,நலக்கல்வியாளர் வி.பாபு சுதந்திர நாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை அஞ்சல் அலுவலக மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.பாலாஜி வரவேற்று பேசினார்.
முகாமில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட அஞ்சலக ஊழியர்களுக்கு காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் நடமாடும் நுண்கதிர் வாகனம் மூலமாக காசநோய் தொடர்பான மார்பு பட பரிசோதனை செய்யப்பட்டது. அஞ்சலக கோட்ட அலுவலக ஊழியர் வி.ஷர்மிளா நன்றி கூறினார்.
No comments
Thank you for your comments