Breaking News

பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு எழுதுபொருட்கள் தொகுப்பு வழங்கினார் எம்எல்ஏ எழிலரசன்

காஞ்சீபுரம் :

காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காஞ்சீபுரம் தொகுதி எம். எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ- மாணவிகளை சந்தித்து பொதுத்தேர்வை சிறப்பாக பயமின்றி எழுதவும், நல்ல மதிப்பெண்கள் பெற்றிடவும் அறிவுரைகள் வழங்கி வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்.


இந்த வகையில் பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள எஸ் எஸ் கே வி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று  பொதுத்தேர்வினை எழுதும் 598 மாணவிகள்,  மற்றும் காமு சுப்பராய முதலியார் பள்ளியில் பயின்று 10 வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் 288 மாண வர்கள் என 886 பேருக்கு எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன் பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல் மற்றும் கணித கருவிகள் அடங்கிய எழுது பொருட்கள் தொகுப்பை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இதில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், ஒன்றிய கவுன்சிலர்ராம் பிரசாத், மாவட்ட பெருளாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments