Breaking News

உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.14.17 லட்சம் நிதியுதவி - காக்கி உதவும் கரங்கள் அமைப்பு வழங்கியது

காஞ்சிபுரம், பிப்.21:

சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி உயிரிழந்த முதல் நிலைக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.14.17 லட்சத்தினை காக்கி உதவும் கரங்கள் அமைப்பு சார்பில் காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம் வெள்ளிக்கிழமை வழங்கினார்.


சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணியாற்றி வந்தவர் சுரேஷ்.இவர் கடந்த 17.2.24 ஆம் தேதி காலமானார்.இவரது இரு பெண் குழந்தைகள் சார்பில் எல்ஐசி பாலிசியாக ரூ.10,42,325 மற்றும் சுரேஷின் தாயார் வேண்டா என்பவருக்கு அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டத்தில் ரூ.3 லட்சம், மனைவி மகேஷ்வரிக்கு ரொக்கப் பணமாக ரூ.75 ஆயிரம் உட்பட மொத்தம் ரூ.14,17,325 காக்கி உதவும் கரங்கள் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது. காக்கி உதவும் கரங்கள் அமைப்பின் 39 வது நிதியுதவியை காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம் சுரேஷின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக எல்ஐசி முகவர் விஏ.துரைராஜ் சார்பில் இரு பெண் குழந்தைகளுக்கும் தலா ரூ.5100 வீதம் மொத்தம் ரூ.10,200 வழங்கப்பட்டது.

உத்தரமேரூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த முதல்நிலைக் காவலர் பி.எஸ். விக்ரமனின் மருத்துவ உதவிக்காக ரூ.48 ஆயிரமும் காக்கி உதவும் கரங்கள் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது.

No comments

Thank you for your comments