Breaking News

காஞ்சிபுரத்தில் நெசவாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் அண்ணா பட்டு கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்கள் பட்டுச்சேலை உற்பத்தி செய்யத் தேவையான மூலப்பொருட்களை வழங்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி சங்க வளாகத்திற்குள் வியாழக்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



காஞ்சிபுரம் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் 1500க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் மூலப்பொருட்களை சங்கத்தில் பெற்றுச் சென்று பட்டுச்சேலையாக செய்து கொண்டு வந்து கொடுத்து அதற்குரிய கூலியை பெற்றுச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பட்டுச்சேலை நெய்வதற்கு தேவையான மூலப்பொருட்களை வழங்காமல் காலம் தாழ்த்துவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

கூலியை கையில் கொடுக்காமல் வங்கியில் செலுத்துவது தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் சங்க வளாகத்திலேயே உட்கார்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து விஷணுகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் சங்கர சுப்பிரமணியன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சமரசப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

No comments

Thank you for your comments