Breaking News

சாம்சங் தொழிற்சாலையில் பணியிடை நீக்கம் கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்

காஞ்சிபுரம், பிப்.21:

சாம்சங் தொழிற்சாலையில் 14 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் அத்தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.



காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் சிஐடியூ தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ள அரசு அனுமதி வழங்கிகியிருந்தது.

அத்தொழிற்சங்கத்தில் இணைந்தவர்களில் சிலரை விலக்கி நிர்வாகம் உருவாக்கியுள்ள கமிட்டியில் இணையுமாறு வலியுறுத்தியிருக்கிறது தொழிற்சாலை நிர்வாகம். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 3 தொழிலாளர்கள் அண்மையில் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து தொழிலாளர்கள் ஆலை வளாகத்திலேயே கடந்த 16 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் சாம்சங் தொழிற்சாலை நிர்வாகம் மேலும் 14 பேரை இரு தினங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்தது.

இதன் காரணமாக தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையில் தொழிற்சாலை நிர்வாகம் ஈடுபடுவதாக கூறி 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காஞ்சிபுரம் அருகே வெள்ளகேட் பகுதியில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு சிஐடியூ மாநில செயலாளர் இ.முத்துக்குமார் தலைமை வகித்து பேசினார்.இதன் மூலம் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments