சூலூர் ஒன்றிய அரசூர் ஊராட்சி துவக்க பள்ளியின் 94 வது ஆண்டு விழா ..!!
கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் சூலூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியின் 94 வது ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
94வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியாக இருந்தது. தனியார் பள்ளிகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் கலைத்திறனை வளர்த்துக் கொள்ளும் அளவிற்கு சிறந்த நடன கலைஞர்களைக் கொண்டு பயிற்சி எடுத்த மாணவ மாணவிகள் தங்களது முழு திறமையையும் மேடையில் வெளிப்படுத்தினர்.
விழாவை பார்த்த மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடக்கும் பொழுது மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில் பெற்றோர்களும் ஆசிரிய பெருமக்களும் கைகளை தட்டி உற்சாகத்தை ஏற்படுத்தினர்.
இச்சிறப்பு வாய்ந்த கலை நிகழ்ச்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அமுதா அவர்களின் தலைமையில், உதவி தலைமை ஆசிரியர் ஜோதிமணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் காயத்ரி ஆகியோர் முன்னிலையில் 94 வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர் பெருமக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments