Breaking News

வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அமைக்கப்பட்டு திறக்கப்படவுள்ள முதல்வர் மருந்தகத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

காஞ்சிபுரம்  :

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம்  “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் சுங்குவார்சத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அமைக்கப்பட்டு  திறக்கப்படவுள்ள முதல்வர் மருந்தகத்தை மாவட்ட  கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு  செய்தார்.



காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம்  “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் நேற்று சுங்குவார்சத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அமைக்கப்பட்டு திறக்கப்படவுள்ள முதல்வர் மருந்தகத்தை மாவட்ட  கலெக்டர்  கலைச்செல்வி மோகன்,    பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர்   தமிழ்நாடு முதலமைச்சரால் சுதந்திர தினவிழா உரையில், (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000  முதல்வர்  மருந்தகங்கள் துவங்கப்படும் “ என அறிவித்தார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் 16 முதல்வர் மருந்தகங்களும், தொழில்முனைவோர் மூலம் 4 முதல்வர் மருந்தகங்களும் ஆக மொத்தம் 20 முதல்வர் மருந்தகங்கள் உட்கட்டமைப்பு வசதிகளுடன் மருந்தக உரிமம் பெறப்பட்டு தயார் நிலையில் உள்ளது. எதிர்வரும் 24 ந்தேதி  தமிழ்நாடு முதலமைச்சரின் தமிழ்நாடு முழுவதும் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படவுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்படி 20 முதல்வர் மருந்தகங்களும் திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. 

மேலும், மேற்படி முதல்வர் மருந்தகங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கிலிருந்து மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டு வரும் பணி நடைபெற்று வருகிறது. இம்மருந்தகங்களில், ஜெனிரிக் வகை மருந்துகளும், பிற மருந்துகளும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் பயனடையும் வகையில் ஜெனிரிக் மருந்துகள் மற்றும் இதர மருந்துகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன. 

இதனடிப்படையில்  திருப்பெரும்புதூர் வட்டாரத்தில் உள்ள சுங்குவார்சத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தினை காஞ்சிபுரம் கலெக்டர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments