Breaking News

காஞ்சிபுரத்தில் இன்று புத்தபிக்குகள் பேரணி

 காஞ்சிபுரம்,பிப்.17:

காஞ்சிபுரத்தில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் 150 புத்த பிக்குகள் பங்கேற்கும் பேரணி மற்றும் மாநாடு நடைபெறுகிறது.


தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை சார்பில் இன்று காஞ்சிபுரத்தில் புத்த பிக்குகள் மாநாடு நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் பூக்கடைச் சத்திரம் அருகில் உள்ள யாதவா சத்திரத்திலிருந்து தொடங்கும் பேரணியில் 150க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள்,பிக்குணிகள் பங்கேற்கிறார்கள்.

பேரணி காலை 8 மணிக்கு தொடங்கி காஞ்சிபுரத்தை அடுத்த வையாவூரில் அமைந்துள்ள புத்தர் திருக்கோயிலில் நிறைவு பெறுகிறது.இதன் தொடர்ச்சியாக திரிபிடக சத்தம்ம ஓதுதல் நிகழ்வு நடைபெறுகிறது.


இதனையடுத்து நடைபெறும் மாநாட்டிலும், பேரணியிலும் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்க பேரவையின் தலைவர்கள், நிர்வாகிகள் பலரும் பங்கேற்கவுள்ளனர்.

மாலையில் நடைபெறும் மாநாட்டில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ச.மு.நாசர்,விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,தமிழக சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் சொ.ஜோ.அருண் சேச,காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மற்றும் எம்பி,எம்எல் ஏக்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உட்பட பலரும் பங்கேற்கவுள்ளனர்.

இத்தகவல் தமிழ்நாடு பௌத்தர் சங்க பேரவையின் செயலாளர் போதி.அம்பேத்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments