காஞ்சிபுரம் வரதர் கோயில் உண்டியல் காணிக்கை வரவு ரூ.57.20 லட்சம்
காஞ்சிபுரம், பிப்.26:
அத்திவரதர் புகழ் பெற்றது காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவித் தாயார் சமேத வரதராஜப் பெருமாள் கோயில். இக்கோயிலில் இருந்த 11 உண்டியல்கள் கடந்த 19.9.2024 ஆம் தேதிக்குப் பிறகு புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டது.
காஞ்சிபுரம் சரக அறநிலையத்துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் முன்னிலையில் உண்டியல்களை கோயில் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் திறந்து எண்ணினார்கள்.இதில் ரொக்கமாக ரூ.57,20,727 இருந்தது.
உண்டியல் எண்ணும் பணியினை கோயில் செயல் அலுவலரும்,உதவி ஆணையருமான ராஜலட்சுமி,கோயில் மணியக்காரர் கிருஷ்ணகுமார் ஆகியோரும் மேற்பார்வை செய்தனர்.
No comments
Thank you for your comments