7 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சி செய்தவருக்கு ஆயுள் தண்டனை - செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
காஞ்சிபுரம், ஜன.21:
காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூர் மேட்டுத்தெருவைச் சேர்ந்த 7 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக அச்சிறுமியின் தாயார் தாலுகா காவல் நிலையத்தில் கடந்த 25.4.2019 ஆம் தேதி புகார் செய்திருந்தார்.புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து முருகன்(39) என்பவரை கைது செய்தனர்.
இவ்வழக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி, நீதிமன்ற காவலர் லதா மற்றும் அரசு வழக்குரைஞர் கே.மைதிலி தேவி ஆகியோர் இவ்வழக்கில் தனிக்கவனம் செலுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் வழக்கை விசாரித்து வந்த செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி நீசீமா பானு முருகன் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் எதிரிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்துள்ளார்.
No comments
Thank you for your comments