யார் அந்த சார்? - காஞ்சிபுரத்தில் அதிமுகவினர் சாலை மறியல் - 314 பேர் கைது
காஞ்சிபுரம், டிச.30:
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்முறையைக் கண்டித்து திமுக ஆட்சியை அகற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டமும், அதனைத் தொடர்ந்து சாலை மறியலும் நடைபெற்றது. காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலுக்கு கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமை வகித்தார்.
முன்னாள் எம்எல்ஏக்கள் வாலாஜாபாத்.பா.கணேசன்,மைதிலி திருநாவுக்கரசு,மதனந்தபுரம் கே.பழனி,அனைத்துலக எம்ஜிஆர்.மன்ற இணைச் செயலாளர் காஞ்சி.பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய வந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை காவல்துறையினர் வழிமறித்து தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. காவல்துறையினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே வாக்கு வாதமும் ஏற்பட்டது.
பின்னர் அதிமுகவினர் திமுக அரசைக் கண்டித்தும்,அண்ணா பல்கலையில் மாணவிக்கு நடந்த பாலியல் துன்புறுத்தலைக் கண்டித்தும் யார் அந்த சார் என்ற வாசகத்தை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாலை மறியல் போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.யு.சோமசுந்தரம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் எஸ்எஸ்.ஆர்.சத்யா ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டு கைதாகனார்கள்.
திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதாக 19 பெண்கள் உட்பட 314 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
No comments
Thank you for your comments