கோவையில் பல்வேறு புதிய திட்ட பணிகளையும் முடிவற்ற பணிகளையும் அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்!
கோவையில் பல்வேறு புதிய திட்ட பணிகளையும் முடிவற்ற பணிகளையும் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்து வருகை புரிந்தார். நிகழ்ச்சியை தொடர்ந்து குனியமுத்தூர் பகுதியில் வார்டு எண் 88-க்கு உட்பட்ட மாநகராட்சி பொதுநிதியின் கீழ் அரசு அலுவலர் காலனியில் உள்ள பூங்கா ரூ.31.00 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் அபிவிருத்தி பணிகளை பகுதி கழக செயலாளர் சி.லோகநாதன் முன்னிலையிலும் வார்டு எண் 89க்குட்பட்ட இராமசெட்டி பாளையத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாநில நிதிக்குழு பள்ளி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.62.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை வார்டு கவுன்சிலர் கே.முருகேசன் முன்னிலையிலும் வார்டு எண்.79க்குட்பட்ட முத்துச்சாமி காலனி மற்றும் க்ரீன் பார்க் சாலை இணைக்கும் இடத்தில் இராஜவாய்க்கால் பகுதியில் பொதுநிதியிலிருந்து ரூ.18.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரும்பு பாலத்தை வார்டு கவுன்சிலர் வசந்தாமணி பழனிச்சாமி முன்னிலையிலும் செல்வபுரம் வார்டு எண் 78.க்கு உட்பட்ட வடக்கு ஹவுசிங்யூனிட் பகுதியில் பொதுநிதியிலிருந்து ரூ.8.90 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை பகுதிக் கழக செயலாளர் கேபிள் மணி, கவுன்சிலர் சிவசக்தி ஆகியோர் முன்னிலையிலும் வார்டு எண் 70-க்கு உட்பட்ட தேவாங்க ஆரம்பப்பள்ளியில் கல்வி நிதியின் கீழ் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2 எண்ணிக்கையிலான வகுப்பறைகள் கட்டிடங்களை பகுதி கழகச் செயலாளர் சுரேஷ் நாராயணன் கவுன்சிலர் சர்மிளா சுரேஷ் நாராயணன் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது இன்று 30 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பில் கோவை மாநகராட்சியில் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கோவை மாநகராட்சியில் புதிய தார் சாலைகளாக 860 கிலோமீட்டர் சாலைகள் 415 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டுள்ளதாகவும் விடுபட்ட சாலைகளை தார் சாலைகளாக மாற்ற கூடுதலாக ரூபாய் 200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு, 100 கோடி ரூபாய் டெண்டர் விடவும், மீதம் 100 கோடி ரூபாய் மதிப்பில் சாலைகள் தேர்வு செய்யப்பட்டு திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கும் பணியை தொடங்கப்பட்டுள்ளதாகவும் மூன்றரை ஆண்டுகளில் கோவை மாநகராட்சி வரலாற்றில் கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு இவ்வளவு நிதிகளில் சாலைகள் அமைத்தது இதுவே முதல் முறை என்றும் சாலை பணிகள், மேம்பாலம் பணிகள், பாதாள சாக்கடை பணிகள், தெரு விளக்குகள் அமைப்பது என முழுமையாக பணிகளை செய்து வருகிறோம் எனவும் அரசு நிகழ்ச்சியில் எதிர்கட்சி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைப்பதற்கு முன்பே, முதல்வர் அந்த திட்டங்களை அறிவித்து நிதியை ஒதுக்கினார் என குறிப்பிட்டார்.குறிப்பாக கோவை மாவட்டத்திற்கு முதலமைச்சர் சிறப்பு கவனம் செலுத்து வருகிறார் எனவும் கோவை மாவட்டத்தில் திட்ட அறிவிப்புகளாக பார்க்காமல், பணிகள் தொடர்பாக முதல்வர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் ஈரோடு வந்தபோது விமான நிலையத்திலேயே கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரை அழைத்து பணிகள் தொடர்பாக விரிவாக ஆய்வு நடத்தி பணிகளை விரைவுபடுத்தி உள்ளார் எனவும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி,கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார்,மேயர் கா.ரங்கநாயகி மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன்,துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, நகரமைப்பு குழு தலைவர் சோமு,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்,முன்னாள் தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் ரவி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி, தெற்கு மண்டல குழுத்தலைவர் ரெ.தனலட்சுமி,உதவி ஆணையர் செந்தில்குமரன்,குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி,ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments