டாக்டர் சி.சிமேட்டி அவர்களின் 216வது பிறந்த நாள் விழா மற்றும் எலக்ட்ரோபதி கருத்தரங்கம்..!
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் டாக்டர் C.C.மேட்டி அவர்களின் 216வது பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான 2வது எலக்ட்ரோபதி கருத்தரங்கம் தமிழ்நாடு எலக்ட்ரோபதி மெடிக்கல் கான்ஃபிடரேஷனின் மாநில தலைவர் டாக்டர் செல்டன் அருள்தாஸ் தலைமையில் நடைபெற்றது.
நியூ டெல்லியில் அமைந்துள்ள என்.இ.எச்.எம் ஆஃப் இந்தியாவின் டெபுடி பிரின்ஸிபல் செக்ரட்டரி டாக்டர் ஆகாஷ் அவஸ்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் மற்றும் கௌரவ அழைப்பாளராக கலந்துகொண்ட முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் நடிகர் கருணாஸ் அவர்கள் எலக்ட்ரோபதி மருத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.
இக்கருத்தரங்கில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட எலக்ட்ரோபதி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர் இதில் மாநில அரசும்,மத்திய அரசும் எலக்ட்ரோபதி மருத்துவத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஓய்வு பெற்ற பாட்னா செசன்ஸ் கோர்ட் நீதிபதி சந்தோஷ்குமார் அக்னிஹோத்ரி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் டிபென்டர் தாமோதரகிருஷ்ணன், டிபென்டர் கோகுலகிருஷ்ணன் மற்றும் டிபென்டர் வழக்கறிஞர் பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் தமிழ்நாடு எலக்ட்ரோபதி மெடிக்கல் கான்பிடரேஷனின் ன் நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநிலம் தழுவிய எலக்ட்ரோபதி மாநாட்டை கோவை மண்டல தலைவர் டாக்டர் ஜேம்ஸ் துரைராஜ் டேவிட் அவர்கள் பொருப்பேற்று நடத்தினார்.
No comments
Thank you for your comments