எல்.ஐ.சி முகவர்கள் சங்கத்தினர் மாபெரும் அறவழிப் போராட்டம்!
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எல்ஐசி லியாஃபி முகவர்கள் சங்கத்தின் சார்பில் அறவழிப் போராட்டம் கோவை கோட்டத்தலைவர் கோ.வெ. குமுணன் தலைமையில் நடைபெற்றது.
இது குறித்து நிர்வாகிகள் தெரிவிக்கையில் நிர்வாகத்துடன் சார்பாக பல கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியுற்றதால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் மேற்கு மண்டலம் கோவை,ஈரோடு, திருப்பூர்,நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆன்லைனில் வாடிக்கையாளர்களுக்கு பிரச்சினைகள் வரும்போது முகவர்கள் தான் அதனை நிவர்த்தி செய்கின்றனர்.
எனவே ஆன்லைன் வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தனர் மேலும் LIC நிர்வாகம் மற்றும் மத்திய அரசு உடனடியாக எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.கோரிக்கைகள் நிறைவேறும் வரை பலகட்ட போராட்டங்கள் நடத்தி உள்ளதாகவும் தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments