கொரோனா நோய்த்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் ஆட்சியர் கலந்துரையாடல் - சாதனைகள் புரியவும் வேண்டுகோள்
காஞ்சிபுரம், டிச.26-
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் கரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்து வசித்து வரும் குழந்தைகளை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் சந்தித்து பேசினார்.
இக்குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாதுகாவலராக நியமிக்கப்பட்டு மத்திய அரசின் மூலம் ரூ.10 லட்சமும், மாநில அரசின் மூலம் ரூ.5 லட்சமும் வழங்கப்பட்டிருந்த நிலையில் மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் பராமரிப்பு நிதியாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
ஆட்சியரது சந்திப்பில்அக்குழந்தைகளின் தேவைகள், தற்போதைய கல்வி நிலை, மேற்படிப்பு ஆகியன குறித்தும் ஆட்சியர் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
கல்வியில் கவனம் செலுத்தி, அதிக மதிப்பெண் பெற்று, மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளிலும் பங்கேற்று வெற்றி பெற வேண்டும்.
அது மட்டுமின்றி பொதுமக்களுக்கு உங்களால் முடிந்த சேவைகளையாவது செய்ய வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.
இச்சந்திப்பின் போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்தி.காவியா, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் அக்குழந்தைகளின் பாதுகாவலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments