கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆணைகளை பெற்ற பயனாளிகள் முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றி
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (02.12.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 178 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்கதிர்பூர் திட்டப்பகுதியில் 2112 குடியிருப்புகளுக்கிடையே கட்டப்பட்டுள்ள கடைகளில் அங்கு வசித்து வரும் பயனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டும், அங்கு வசித்து வரும் குடியிருப்புதாரர்களின் தினசரி தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும் 8 கடைகளுக்கு விருப்பமுள்ள பயனாளிகளிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஏலம் முறையில் அதிகமாக கோரப்பட்ட தொகையினை மாத வாடகையாக நிர்ணயம் செய்து, தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில் கடைகள் ஒதுக்கீடு ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் பெற்ற பயனாளிகள் "நிறைந்தது மனம்" திட்டத்தின்கீழ் தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. க.ஆர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.சத்யா, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.சி.பாலாஜி, தனிதுணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.பாக்கியலட்சுமி, காஞ்சிபுரம் கோட்ட நிர்வாகப் பொறியாளர் (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) திரு. ஜெ. குமரேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments