Breaking News

காஞ்சிபுரத்தில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம்

காஞ்சிபுரம், டிச.7:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் ஸ்ரீ பெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.


காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.ஸ்ரீ பெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு தலைமை வகித்தார்.

ஆட்சியர் கலைச்செல்வி மோகன், எஸ்.பி.கே.சண்முகம்,எம்பி க.செல்வம்,எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன்,மாவட்ட ஊராட்சிக் குழுவின் தலைவர் படப்பை ஆ.மனோகரன், மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி வரவேற்று பேசினார்.

இக்கூட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு அவையனைத்தும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறுகிறதா என எம்பி டி.ஆர்.பாலு ஆய்வு செய்தார். 

பணிகளை விரைந்து முடிக்குமாறும் அவர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், சார் ஆட்சியர் ஆஷிக்அலி,ஒன்றியக்குழு தலைவர்கள் மலர்க்கொடி குமார், , ஹேமலதா ஞானசேகர்,சரஸ்வதி மனோகரன் ஆகியோர் உட்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,அரசின் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments