கோவை மாநகரில் பணியாற்றி வரும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 56 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!



தமிழகம் முழுவதும் 56 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், இதில் சிலருக்கு பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி,கோவை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த பாலகிருஷ்ணன், சென்னை டி.ஜி.பி அலுவலக நிர்வாக ஐ.ஜி- ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்



கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றி வந்த ஸ்டாலின், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.



மாநகரில் தெற்கு துணை ஆணையராக பணியாற்றி வந்த சரவணக்குமார் சென்னை தெற்கு பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மண்டல டிஐஜி யாக பணியாற்றி வரும் சரவண சுந்தருக்கு ஐ.ஜி-ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர் தற்போது கோவை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.



சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த தேவநாதன் கோவை மாநகர காவல் துணை ஆணையராக (வடக்கு) நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி,,யாக இருந்தத சிமோகன் கோவை சரக டி.ஐ.ஜி- ஆக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.





No comments

Thank you for your comments