Breaking News

காஞ்சிபுரத்தில் நாளை கூட்டுறவுத்துறையின் குறை தீர்க்கும் கூட்டம்

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரத்தில் நாளை 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கூட்டுறவுத்துறை சார்பில் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற இருப்பதாக அவரது அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கூட்டுறவுத்துறை சார்பில் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவுச் சங்க பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான குறை தீர்க்கும் கூட்டம் நாளை 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் சங்க பணியாளர்கள், ஓய்வூதியதார்கள் தங்களது குறைகள் ஏதேனும் இருப்பின் தெரிவித்து பயன்பெறுமாறும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments