Breaking News

காஞ்சிபுரத்தில் தடகளப் போட்டிகளில் தங்கம் வென்ற மாணவியருக்கு பாராட்டு

காஞ்சிபுரம், நவ.13:

அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்ற அக்கல்லூரி மாணவியர் கல்லூரியின் நிறுவனரை புதன்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


சென்னை அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.இப்போட்டிகளில் வாலாஜாபாத் அருகே சங்கராபுரத்தில் உள்ள ஆதி பொறியியல் கல்லூரி மாணவியர் 3 தங்கம்,4 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை வென்றனர்.

பதக்கம் வென்றவர்கள் கல்லூரியின் நிறுவனர் எஸ்.சரண்ராஜை சந்தித்து கோப்பை மற்றும் சான்றிதழ் ஆகியனவற்றை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.இந்நிகழ்வின் போது கல்லூரியின் தலைமை நிர்வாக அலுவலர் சுஜாதா மாறன்,முதல்வர் ஏ.தேவராஜ் ஆகியோரும் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments