Breaking News

இரத்தினபுரி ஐசிடிஎஸ் குழந்தைகள் மைய வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கினார்

கோவை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்தில் வாரணவாசி அங்கன்வாடி மையத்தில் ஊட்டசத்தை உறுதி செய்யும் திட்டத்தின் 2ம்கட்டமாக காணொளி மூலம் தமிழ்நாடு முழுவதும் துவக்கி வைக்கப் பட்டுள்ளது.

இதை தொடர்ந்து கோவை மாநகராட்சி 46வது வார்டில்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் இரத்தினபுரி ஐசிடிஎஸ் குழந்தைகள் மைய வளாகத்தில்  மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி,துணை மேயர் ரா.வெற்றிச் செல்வன்,மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, பொது சுகாதாரக்குழு தலைவர் பெ.மாரி செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கினர்.

இந்நிகழ் வில் மாமன்ற உறுப்பினர்கள் பொது மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments