சக்தி தேவி அறக்கட்டளை மற்றும் காவல் துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளை சார்பில் ஆண்டு விழா கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா !
கோவை மாவட்டம் கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் ஈரோடு சக்தி தேவி அறக்கட்டளை மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளையின் சார்பாக 8-ஆம் ஆண்டு விழா மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
அறக்கட்டளையின் தலைவர் என் ரத்தினம் முன்னிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் வி பாலகிருஷ்ணன்,நடிகர் சிவகுமார், ஈரோடு சக்தி மசாலா நிறுவனர் பி சி துரைசாமி, ஆகிய கலந்து கொண்டு பேசினர்.இந்த விழாவில் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் சக்தி மசாலா நிறுவனம் சார்பாக அதிக மதிப்பெண் பெற்ற காவலர் குடும்ப மாணவ- மாணவியர்களுக்கு 25 நபருக்கு தல 20000 ஊக்கத்தொகை வழங்கப் பட்டது.இந்த விழாவிற்கு வருகை புரிந்த அனைவருக்கும் காவல்துறை கண்காணிப்பாளர் பால்ராஜ் நன்றி தெரிவித்தார்.
No comments
Thank you for your comments