Breaking News

கேம்ஃபோர்டு சர்வதேசப் பள்ளியில் 15வது பள்ளி ஆண்டு விழா மற்றும் நிறுவனர் தினவிழா நடைபெற்றது.

கோவை மாவட்டம் மணிகாரம்பாளையம்  பகுதியில் இயங்கிவரும் கேம்ஃபோர்டு சர்வதேசப் பள்ளியில் நடைபெற்ற 15வது பள்ளி ஆண்டு விழா மற்றும் நிறுவனர் தின விழாவிற்கு மேஜர் ஜெனரல் ர. இந்திரபாலன் தலைமை தாங்கினார்.



இப்பள்ளியின் தலைவர் என்.அருள் ரமேஷ்,தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ்,தலைமையாசிரியை டாக்டர் பூனம் சியால் ஆகியோர் பிரதம அதிதிக்கு ஓர் கைவினைப் பாராட்டும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர்.



இவ்விழாவில் 2023-2024-ஆம் கல்வியா ண்டில் 10 மற்றும் 12,ஆம் வகுப்புகளில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவிகளு க்கு பிரதம அங்கத்தலைவர்,தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர். 


நிகழ்ச்சியை தொடர்ந்து மேஜர் ஜெனரல் ர.இந்திரபாலன் கூறியதாவது வெற்றி கரமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான மனமும் உடலும் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.



நாம் எப்படி நினைக்கிறோம் உணர்கி றோம் மற்றும் செயல்படுகிறோம்,மன அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது, மற்றவர்களுடன் தொடர்பு கொள்வது மற்றும் தேர்வுகள் எழுதுவது மேலும் 'ஆரோக்கியமான உடல் வலிமையான மனம்,மன உறுதி மற்றும் நேர்மறை எண்ணம் ஆகியவை கடின உழைப்பின் கூறுகள்"என்று குறிப்பிட்ட அவர் இது வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் என்றும் எடுத்துரைத்தார்.



பள்ளியின் தலைவர் என்.அருள் ரமேஷ் கூறியதாவது கல்வி ஒரு பழக்கமல்ல, வாழ்க்கையின் ஓர் பகுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார் ஆண்டு முழுவதும் நடைபெற்ற கல்வி இணைப்பாடத்திட்டம் மற்றும் பாட நெறிக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளை முன்னிலைப்படுத்த, பள்ளி முதல்வர் டாக்டர் பூனம் சியால் ஆண்டறிக்கையை விளக்கினார்.

இந்நிகழ்வில் பல்வேறு நடனமும் நாடகப்பரபரப்புகளும் கொண்ட ஒரு சிறந்த நிகழ்ச்சியாக நடைபெற்றது.




இதில் மாணவர்கள் பல்வேறு நடன,நாடக பாணிகளையும் கருப்பொருட்களையும் காட்சிபடுத்தினார்கள், பஞ்சபூதங்களின் உயிர்ப்பான நடனம், அதன் பின்னர் மெய்சிலிர்க்கும் காந்தாரா நடனம்,சீன தேச பாரம்பரிய நடனக்கலை,குழு ஒருங்கிணைப்பை வலியுறுத்தும் நாடகம் மற்றும் கருப்பொருட்களை உள்ளடக்கிய பல்வேறு வகையான நடனம் மற்றும் நாடக நிகழ்ச்சிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இதில் ராக் இசைக்குழுவின் மகிழ்வான நிகழ்ச்சியும்,அதைத் தொடர்ந்து ஒரு ஆத்மார்த்தமான அழைப்பிதழ் நடனம், UV நிகழ்ச்சியானது நடிப்பிற்கு கூடுதல் அழகையும் சேர்த்தது,இந்நிகழ்ச்சியில்  மாணவ மாணவியர்கள்,பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


No comments

Thank you for your comments