காஞ்சி மருத்துவமனைக்கு நோயை தீர்க்க வந்தால் நோய் தொற்று உருவாகும் அவல நிலை..
காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவமனையில் கழிவு பொருள் குப்பையை அகற்றாமல் மலைபோல் குவிந்து கிடைக்கும் குப்பை பொருட்களால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
பலமுறை மாநகராட்சி தெரிவித்தும் அகற்றாமல் இருப்பதால் தூர்நாற்றம் எடுப்பதுடன் மருத்துவமனைக்கு நோயை தீர்க்க வந்தால் நோய் தொற்று உருவாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது மழை காலம் என்பதால் மேலும் அங்கே சுற்றியுள்ள மக்களும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.
இந்நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை 4-00 மணியளவில் பாஜக சார்பாக சார்பாக மாவட்ட தலைவர் K.S.பாபு ஜி மற்றும் பாஜக பொறுப்பாளர்கள் இதுகுறித்து நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும், மலைபோல் குவிந்து கிடைக்கும் குப்பைகளை உடனே அகற்றி சுகாரதாரமாக வைக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
No comments
Thank you for your comments