ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறக் காரணமாக இருந்த ஆசிரியர்கள்-ஊக்கத் தொகை வழங்கி ஆட்சியர் பாராட்டு
காஞ்சிபுரம்,அக்.28:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி,ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 353 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அவை அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களுக்கு உடனடியாக தீர்வு காணுமாறு ஆட்சியர் பரிந்துரை செய்தார்.
இதனையடுத்து ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் அதிக தேர்ச்சி விகிதம் காட்டி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறக் காரணமாக இருந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஊக்கத்தொகை வழங்கினார்.
பின்னர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 3 பேரின் வாரிசுதாரர்களுக்கு திருதவித்தொகையாக மொத்தம் ரூ.14,75,000த்தையும் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி,மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தனலட்சுமி ஆகியோர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments