ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோவிலில் நவராத்திரியையொட்டி ஸ்ரீ யுரேகா ஆர்ட் அகாடமி சார்பில் பரதநாட்டியம் நிகழ்ச்சி
சின்ன காஞ்சிபுரம் திருக்கச்சிநம்பி தெருவில் உள்ள ஸ்ரீ யுரேகா ஆர்ட் அகாடமி சார்பில் பெரிய காஞ்சிபுரம் ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோவிலில் புரட்டச்சி மாதம் நவராத்திரியையொட்டி பரதநாட்டியம் மற்றும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் ஸ்ரீ யுரேகா நடன பள்ளி மாணவிகள் பல்வேறு தெய்வீக பாடலுக்கு நடனம் ஆடினார்கள் வாய்பாட்டு மற்றும் வயலின் வாசித்தார்கள் யோகா மாணவ மாணவியர்கள் பல்வேறு வகையான யோகாவை நிகழ்த்தினார்கள் இவர்களை பாராட்டி வாழ்த்தி சான்றிதழ் நினைவு பரிசு வழங்கினார்
பத்திரிகையாளர் ஆ. முருகன், இந்நிகழ்ச்சியில் ஸ்ரீயுரேகா ஆர்ட் அகாடமியின் நிறுவனர் பிரேமா பரதநாட்டிய ஆசிரியர் அபிராமி பெற்றோர்கள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்
Post Comment
No comments
Thank you for your comments