தேவரியம்பாக்கத்தில் மகளிர் சுயவேலைவாய்ப்பு பயிற்சி தொடக்கம்

காஞ்சிபுரம், அக்.23:

காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கத்தில் உள்ள வறுமை ஒழிப்புச் சங்க கட்டிடத்தில் இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையம் சார்பில் மகளிருக்கு ஆடை அலங்கார பூ வேலைப்பாட்டுக்கான பயிற்சி வகுப்பு தொடக்கவிழா புதன்கிழமை நடைபெற்றது.


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் உள்ள வறுமை ஒழிப்புச் சங்க கட்டிடத்தில் ஊராட்சி நிர்வாகமும்,இந்தியன் வங்கியின் சுயதொழில் வேலைவாய்ப்பு பயிற்சி மையமும் இணைந்து சுயதொழில் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.

மகளிருக்கு ஆரி ஒர்க் எனப்படும் ஆடை அலங்கார பூ வேலைப்பாட்டுக்கான 30 நாள் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.

விழாவிற்கு தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமை வகித்து வரவேற்று பேசினார். 

இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மைய இயக்குநர் உமாபதி,வாலாஜாபாத் இந்தியன் வங்கியின் கிளை மேலாளர் ஜெயந்தி உதவி மேலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் பிச்சாண்டி குத்து விளக்கேற்றி பயிற்சி முகாமை தொடக்கி வைத்து பேசினார்.

விழாவில் பயிற்சியாளர் ஆறுமுகம்,வட்டார ஒருங்கிணைப்பாளர் ரேணுகா ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். நிறைவாக ஊராட்சி மன்ற செயலாளர் சாந்தி நன்றி கூறினார்.

No comments

Thank you for your comments