Breaking News

தீபாவளி ஸ்பெஷல் எடிஷன் கோ கிளாம் விற்பனை கண்காட்சி

கோவையில் பிரபல கோ கிளாம் விற்பனை கண்காட்சி அவினாசி சாலையில் சுகுணா மண்டப அரங்கில்  துவங்கியது.



தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை கண்காட்சியாக நடைபெறும் இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை அணிகலன்கள், நகைகள், விற்பனைக்கான,நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள்  அமைக்கப்பட்டுள்ளன. கோவை மற்றும் அதன் சுற்றுப்புற, பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே  பெரும் வரவேற்பை பெற்ற ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி கடந்த பத்து ஆண்டுகளாக  வெவ்வேறு பண்டிகை மற்றும் பல்வேறு சீசன்களில்  தமது விற்பனை கண்காட்சியை நடத்தி வருகிறது.



கண்காட்சாயானது அக்டோபர் 18,19,20 ,  ந்;தேதி  வரை   மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், பரிசு பொருட்கள்,வீட்டு அலங்கார பொருட்கள்  என நூறுக்கும்   மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.குறிப்பாக தீபாவளி  பண்டிகை வருவதையொட்டி பெண்களுக்கான பல்வேறு விதமான ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.முன்னதாக,கோக்ளாம் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் கள் ஹீனா மற்றும் ராகுல் தலைமையில் நடைபெற்ற  கண்காட்சி துவக்க விழாவில்,சிறப்பு விருந்தினர்களாக, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி  இளஞ்செல்வி கார்த்திக் மற்றும் முக்கிய பிரமுகர்கள்  பவித்ரா ராகவ், மித்ரா பிரசாத், , யமுனா, சரண்யா, நிஷா கார்த்திக், சுமதி கார்த்திகேயன், ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர்.



கண்காட்சியின் ஒருங்கிணைப்பா ளர்களான ஹீனா மற்றும் ராகுல் ஆகியோர் ஷாப்பிங் கண்காட்சி குறித்து பேசுகையில்,இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு  விற்பனை  கண்காட்சியாக துவங்கப்பட்டுள்ளதாகவும்,ஷாப்பிங் செய்ய வருபவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களுக் கான அரங்குகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ள தாகவும்,குறிப்பாக கண்காட்சியில், பெண்களுக்கான லேட்டஸ்ட் மாடல் ஆடைகள்,கொல்கத்தா,லூதியானா, குஜராத்,டில்லி,ஜெய்ப்பூர்,புனே என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிரத்யேகமாக விற்பனை செய்யபடுவதாக தெரிவித்தனர். அக்டோபர் 20ந்தேதி வரை நடைபெற உள்ள இதில் கோவை,திருப்பூர், ஈரோடு,நாமக்கல்,உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வந்து பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்வதாக தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments