Breaking News

குழந்தைகளிடம் ஆபாச படம் காட்டி உணர்ச்சியை தூண்டிய அரசு அதிகாரி

குழந்தைகளிடம் ஆபாச படம் காட்டி உணர்ச்சியை தூண்டிய அரசு அதிகாரி 

சிறுவனிடம் தகாத முறையில் நடந்து வெளியே தெரியக்கூடாது என கொலை செய்த கொடூரம் 

தகாத உறவால் சீரழிந்த குடும்பம், அரசு அதிகாரியில் காம இச்சை


காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டம் கருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். அரசு ஊழியரான ராஜேஷ் காஞ்சிபுரம் நில அளவை உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். பரந்தூர் விமான நிலையம், திட்டம் நில அளவையில் பணியாற்றி வருகிறார். 

ராஜேஷுக்கு திருமணமாகிய நிலையில் மனைவியை பிரிந்து வசித்து வந்துள்ளார். அதே கருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த தனலட்சுமி - ஆனந்த் ஆகிய தம்பதியினருக்கு பத்து வயதில் பெண் குழந்தையும் ஆறு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. தனலட்சுமி கருத்து வேறுபாடு காரணமாக, ஆனந்தைப் பிரிந்து வசித்து வந்துள்ளார். ‌


கருத்து பேட்டை பகுதியில் தனலட்சுமி தாய் சிறிய டிபன் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.   தனலட்சுமிக்கு வேலை இல்லாததால் தனது தாய் நடத்தும் டிபன் கடையில் உதவி செய்து வந்துள்ளார்.  மனைவியைப் பிரிந்து ராஜேஷ் வாழ்ந்து வருவதால் அவ்வப்போது, தனலட்சுமி தாய் நடத்தும் டிபன் கடைக்கு சென்று டிபன் சாப்பிடுவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார்.. 

இந்த நிலையில் தனலட்சுமி மற்றும் ராஜேஷ் ஆகிய இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது.  நாளடைவில் இந்த பழக்கம் நட்பாக மாறியுள்ளது. செல்போன் மூலம் தங்களுடைய நட்பை ராஜேஷ் மற்றும் தனலட்சுமி ஆகியோர் வளர்த்து வந்துள்ளனர். நட்பு காலப்போக்கில் தகாத உறவாக மாறி உள்ளது. அவ்வப்போது ராஜேஷ் தனலட்சுமி சந்தித்து தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். 

தொடர்ந்து நில அளவை துறையில் தற்காலிக வேலை குறித்த அறிவிப்பு வந்தபோது, தனது அதிகாரத்தை பயன்படுத்தி ராஜேஷ் தனலட்சுமிக்கு நில அளவை துறையில் தற்காலிக வேளையும் வாங்கி கொடுத்துள்ளார். இதனால் இவர்களுடைய தகாத உறவு தொடர்ந்து வளர்ந்து வந்துள்ளது. ராஜேஷ் தனலட்சுமி வீட்டிற்கு சென்று வருவதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. 

அவ்வாறு செல்லும் போது ராஜேஷ் நேற்று முன்தினம் தனலட்சுமி மகனிடம் தகாத முறையில் நடந்துள்ளார். தொடர்ந்து அவ்வப்போது தனலட்சுமி வீட்டில் இல்லாத போது, இதுபோன்று அந்த சிறுவனிடம் தகாத முறையில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சம்பவத்தன்று சிறுவனிடம் தகாத முறையில் நடந்ததால் சிறுவனை தாக்கியுள்ளார். சிறுவனை தாக்கி விட்டு அங்கிருந்து, ராஜேஷ் தப்பி சென்றுள்ளார். குழந்தைக்கு உடல்நிலை தான் சரியில்லை என நினைத்த தனலட்சுமி, மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது குழந்தை தாக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. 



இந்தநிலையில் இது தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரணையை தொடங்கினர். தனலட்சுமி  பெண் குழந்தையிடம் விசாரித்த போது, அவ்வப்போது ஆபாச படங்களை சிறுவன் மற்றும் சிறுமி ஆகிய இருவருக்கும் ராஜேஷ் காண்பித்து உணர்ச்சிகளை தூண்டும் வகையில் நடந்துள்ளார். 

சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக கொலை வழக்கு மற்றும் போச்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு ராஜேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

No comments

Thank you for your comments