Breaking News

வயநாடு பாதிப்புக்கு தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு உயர் சங்கத்தின் சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவி

காஞ்சிபுரம்  : 

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட கேரள சகோதரர்களுக்கு நிதியுதவி செய்வதென தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கம் தீர்மானித்து, நன்கொடை திரட்டி அனுப்ப மாவட்ட மையங்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. 


இதையெடுத்து எல்லா மாவட்டங்களிலிருந்தும் வரப்பெற்ற நன்கொடை தொகையில் முதல் தவணையாக ரூ.10,00,000 (ரூபாய் பத்து லட்சம் மட்டும்)க்கான காசோலையை, வயநாடு மாவட்ட கலெக்டரிடம்  கொடுப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, சங்கத்தின் நிறுவனத் தலைவர்  கே.கங்காதரன், மாநிலத் தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன், மாநில பொதுச் செயலாளர்  எஸ்.மகாலிங்கம் , மாநிலப் பொருளாளர் காஞ்சி இ.திருவேங்கடம் ஆகியோர் வயநாடு சென்று கூடுதல் கலெக்டர்  நேரில் சந்தித்து காசோலையை கொடுத்தனர்.

No comments

Thank you for your comments