காஞ்சிபுரம் மாநகரின் பிரதான சாலைகளில் இரவு நேரத்தில் தீடிர் விசிட் அடித்த மாவட்ட ஆட்சியர்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாநகரின் பிரதான சாலைகளில் இரவு நேரத்தில் தீடிர் விசிட் அடித்த மாவட்ட ஆட்சியர்
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் மாநகரின் முக்கிய சாலையான கிழக்கு ராஜ வீதி முதல் கம்மாள தெரு பகுதி வரை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட எஸ்.பி,மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிடோருடன் நேரில் ஆய்வு
இரவு வேளையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளின் தீடிர் ஆய்வால் பரபரப்புடன் காணப்பட்ட பிரதான சாலை

காஞ்சிபுரம் மாநகரின் பிரதான சாலையான கிழக்கு ராஜ வீதி சாலை அவ்வப்போது போக்குவரத்து நெரிசலை மிகுந்து காணப்படுவது வழக்கமான ஒன்றாகவே இருந்துவருகிறது. இச்சாலை சுமார் 80அடி அகலம் கொண்ட பெரிய சாலையாக பெயரளவிலேயே இருந்து வருகிறது. இதற்கு காரணம் சாலைகள் அக்கிரமிப்பு,மின்வாரிய துறையின் மின்கடத்தி செல்லக்கூடிய கம்பங்களுமே பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது உள்ளிட்டவையே இதன் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் உங்கள் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாநகரின் பிரதான சாலையான பூக்கடை சத்திரம் எனப்படும் கிழக்கு ராஜ வீதி பகுதியில் இரவு வேளையில் த மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அங்கு போக்குவரத்திற்கு நெரிசலுக்கு உள்ளாகும் வகையில் ஆக்கிரமிப்புகள் மற்றும் மின்கம்பங்களை உடனடியாக அகற்றி மாற்றியமைத்தியவும் உத்திரவிட்டார்.
மேலும் கிழக்கு ராஜ வீதி முதல் செங்கழுநீரோடை வீதி பகுதியான கம்மாளதெரு சந்திப்பு வரை சுமார் கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே சென்று போக்குவரத்து நெரிசலை தடுத்து இடையூறை ஏற்படுத்தா வண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு துறை ரீதான அதிகாரிகளுக்கு உத்தரவினை பிறபித்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாநகராட்சி ஆணையர் நவேந்திரன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்,மின்வாரிய அதிகாரிகள்,இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் என பல்வேறு துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.
தீடிரென இரவு வேளையில் மாவட்ட ஆட்சியர் மாநகரின் மிகமுக்கியமான பிரதான சாலையில் ஆய்வில் ஈடுபட்டதால் அச்சாலையில் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது.
No comments
Thank you for your comments