காஞ்சிபுரத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் - கலெக்டர் கலைச்செல்வி மோகன் தொடக்கி வைத்தார்
காஞ்சிபுரம், செப்.18:
காஞ்சிபுரம் அருகே பொன்னேரிக்கரையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் 6 நாட்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது.கல்லூரி முதல்வர் கவிதா தலைமை வகித்தார்.
கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரசேகரன்,உதவிப் பேராசிரியர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு முகாமை குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்து பேசியது.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பை தேடுவது மட்டுமில்லாமல் சுய தொழில் தொடங்கவும் முயற்சி எடுக்க வேண்டும்.
சுய தொழில் தொடங்கும் போது தொழிலதிபர்களாகவும் வர முடியும், அதே நேரத்தில் பலருக்கும் வேலைவாய்பபும் அளிக்க முடியும் என்றும் ஆட்சியர் பேசினார். திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் செப்.18ல் தொடங்கி செப்.20 ஆம் தேதி வரை ஒரு கட்டமாகவும், செப்.25 ஆம் தேதி தொடங்கி செப்.27 ஆம் தேதி மற்றொரு கட்டமாகவும் மொத்தம் 6 நாட்கள் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் திருமலை பொறியியல் கல்லூரி, ஜேப்பியார் பொறியியல் கல்லூரி மற்றும் அண்ணா பல்கலையின் உறுப்புக்கல்லூரியில் பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments