Breaking News

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உன்னத் அபியான் திட்டத்தின் கீழே கலந்துரையாடல் கூட்டம்

காஞ்சிபுரம் செப் 22:   

உன்னத் பாரத் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் மகளிர் சுயதிற்கான கலந்துரையாடல் கூட்டம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட கூட்டரங்கில்  நடைபெற்றது. 


ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை மனோகரன்  துணை தலைவர் நித்யா சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் கேரளா மாநில முன்னாள் தலைமைச் செயலாளரும் திட்டத்தின் தலைவருமான எஸ் எம் விஜய் ஆனந்த், சென்னை இந்தியன் டெக்னாலஜி விரிவுரையாளரும் ஒருங்கிணைப்பாளருமான பி .மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு உன்ன பாரத் அபிநயா திட்டத்தின் செயல்பாடுகள் எப்படி அதை செயல்படுத்துவது ஊராட்சி அளவில கொண்டு சென்று சிறப்பாக பணியாற்றுவது குறித்து  விரிவாக பேசினார்கள். 

இதில் தேவரியபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அசோக் குமார், பூந்தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் எம். ஞானப்பிரகாசம் உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மகளிர் குழு சேர்ந்த மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments