காஞ்சிபுரத்தில் வாசகர் வட்டக் கூட்டம்
காஞ்சிபுரம், செப்.22:
தமிழ்நாடு வாசகர் வட்டத்தின் கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் காஞ்சி சங்கர மட வரவேற்புக் குழுவின் தலைவர் டி.கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் ஸ்தானீகர் சி.ஆர். நடராஜ சாஸ்திரிகள் முன்னிலை வகித்தார்.டி.ஆர்.சுப்பிரமணி வரவேற்று பேசினார்.கூட்டத்தில் காஞ்சிப் பட்டின் பாரம்பரியம் என்ற தலைப்பில் சுங்குவார்சத்திரம் எழுத்தாளர் சு.ரவி,சில பயணங்கள் சில பதிவுகள் என்ற புத்தகத்தின் அறிமுகவுரையை எழுத்தாளர் வி.எஸ்.ரவிச்சந்திரனும் பேசினார்கள்.
இயற்கையோடு இணைந்த வாழ்வியல் என்ற தலைப்பில் சென்னை மருத்துவர் சுசித்ராராஜ்,தமிழர்கள் இந்துக்களா என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ்.பிரபாகரனும் பேசினார்கள்.தமிழ்நாடு வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பு வாசகர் வட்டதின் செயல்பாடுகளை விளக்கி பேசினார்.பாஜக பிரமுகர் எஸ்.ஆர்.மணிகண்டன் நன்றி கூறினார்.
No comments
Thank you for your comments