Breaking News

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்ட முகாம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம் செப்டம்பர் 18ம் தேதி காலை 8.00 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 19ம் தேதி காலை 9.00 வரை நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் வெ.விஷ்வ பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார். முகாமிற்கு கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமை தாங்கி பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.



பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார், சுகாதார ஆய்வாளர் பரமசிவம், திமுக ஒன்றிய செயலாளர் நா.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாவட்ட கூடுதல் ஆட்சியர் தாட்கோ மேலாளர் கு.மகேஸ்வரி அரசு மருத்துவமனை, அரசு பள்ளிகள், நீர் தேக்க தொட்டிகள், வளம் மீட்பு பூங்கா, பொதுக் கழிப்பிடங்கள் ஆகியவைகளை ஆய்வு மேற்கொண்டார். இம்முகாமில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினார்கள். நிகழ்வில் கூடுதல் ஆட்சியர்கள், வருவாய்த்துறை, மின்சாரத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் கலந்து கொண்டு துறை வாரியாக மனுக்களை பெற்றுக் கொண்டனர்.

No comments

Thank you for your comments