காஞ்சிபுரத்தில் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்
காஞ்சிபுரம், செப்.17:
புரட்டாசி மாதப் பிறப்பையொட்டி செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில்கள் அனைத்திலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரத்தில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும், வரலாற்றுச் சிறப்புமிக்கதுமான பெருமாள் கோயில்கள் உள்ளன.
புரட்டாசி மாதப் பிறப்பையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதர் புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் காலையில் உற்சவர் வரதராஜருக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது.
மாலையில் ஸ்ரீதேவி,பூதேவியருடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் சந்நிதிக்கு சென்று சிறப்பு தீபாராதனகள் நடைபெற்று மீண்டும் ஆலயம் வந்து சேர்ந்தார்.
அதிகாலையிலிருந்தே வரதராஜப் பெருமாள் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி மகா சம்ப்ரோஷணம் நடைபெற்ற உலகளந்த பெருமாள் கோயில், 108 வைணவத் திருத்தலங்களில் 8 திருக்கரங்களை உடைய அஷ்டபுஜப்பெருமாள் கோயில், வைகுண்டப் பெருமாள் கோயில் ஆகியனவற்றிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை காணமுடிந்தது.
No comments
Thank you for your comments