Breaking News

பொறந்துடுச்சி புரட்டாசி - அசைவ உணவுகளை விலக்கி கோவிலை நோக்கி படையெடுத்த பக்தர்கள்

பொறந்துடுச்சி புரட்டாசி - அசைவ உணவுகளை விலக்கி கோவிலை நோக்கி படையெடுத்த பக்தர்கள்

புரட்டாசி மாதம் தொடங்கி உள்ளதையொட்டி  முதல் நாளிலேயே உலக புகழ்பெற்ற‌அத்திவரதர் கோவில் என்றழைக்கபடும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள் கூட்டம்.

நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி அளித்த வரதராஜ பெருமாளை தரிசனம் செய்து வணங்கி வழிபாடு


பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் இன்று முதல் தொடங்கி உள்ளதை ஒட்டி பெருமாள் கோவில்களில் விசேஷ பூஜைகள் நடைபெற்று பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், அத்தி வரதர் கோவில் என புகழ் பெற்றதுமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதை ஒட்டி முதல் நாளிலேயே ஏராளமான பக்தர்கள் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்து புரட்டாசி விரதத்தை தொடங்க வருகை தந்தனர்.


புரட்டாசி மாதம் தொடங்கியதை ஒட்டி அத்திகிரி மலையில் இருந்து கண்ணாடி மாளிகையில் எழுந்தருளிய ஸ்ரீதேவி பூதேவி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வரதராஜ பெருமாளை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா, கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி புரட்டாசி விரதத்தை தொடங்கி  சென்றனர்.

வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பெருந்தேவி தாயார் சன்னதி லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதி அத்திகிரி மலையில் உள்ள வரதராஜ பெருமாள் மூலவர் சன்னதியில் நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள்  காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனர்.

No comments

Thank you for your comments