காஞ்சிபுரத்தில் வேத விற்பன்னர்கள் கருத்தரங்கம் - சான்றிதழ் வழங்கினார் காஞ்சி சங்கராசாரியார் சுவாமிகள்
காஞ்சிபுரம், செப்.17:
இக்கருத்தரங்கில் தமிழகம்,ஆந்திரா, கர்நாடகா, புதுதில்லி, மும்பை உள்ளிட்ட இடங்களிலிருந்து வேத பண்டிதர்கள் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கருத்தரங்க நிறைவில் 48 வேத விற்பன்னர்களுக்கு காஞ்சி சங்கராசாரியார் சுவாமிகள் சான்றிதழ் மற்றும் சன்மானங்கள் வழங்கி ஆசியுரை நிகழ்த்தினார்.
ஏற்பாடுகளை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர்,செல்லா.விஸ்வநாத சாஸ்திரி,ஓரிக்கை மணி மண்டப நிர்வாக அறங்காவலர் மணி ஐயர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
காஞ்சி சங்கராசாரியார் சாதுர்மாஸ்ய விரதம் கடைப்பிடித்த நாட்களில் ஓரிக்கை மகா பெரியவர் மணி மண்டபத்தில் சங்கீத வித்வான்களின் இன்னிசை நிகழ்ச்சி, ஆன்மீக சொற்பொழிவுகள், திருக்கோயில் வழிபாட்டுக்குழுவினரின் மாநாடு, சட்ட நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்தரங்கம்,நூல்கள் வெளியீடு,உலக நன்மைக்காக யாகங்கள் ஆகியனவும் நடைபெற்றது குறிப்பிடத் தக்கது.
No comments
Thank you for your comments