காஞ்சிபுரத்தில் ஊட்டச்சத்து மாத விழா - ஊட்டச்சத்துப் பெட்டகம் வழங்கினார் கலெக்டர் கலைச்செல்வி மோகன்
காஞ்சிபுரம்,செப்.23:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.கூட்டம் தொடங்கியதுமே ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாக் கண்காட்சியும் நடைபெற்றது. கண்காட்சியை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம் மற்றும் பழ மரக்கன்றுகளையும் ஆட்சியர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து குறை தீர்க்கும் கூட்டத்தில் 448 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அவை அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களுக்கு தீர்வு காணுமாறு ஆட்சியர் பரிந்துரை செய்தார்.
No comments
Thank you for your comments