சிறந்த திமுக நகராட்சி செயலாளர் விருது - கூடலூர் நகராட்சி தலைவர் அ.அறிவரசுக்கு பாராட்டு விழா

சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் திமுகவின் பவளவிழா ஆகியவை இணைந்து கடந்த செப்டம்பர் 17 அன்று முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. இதில் கழகத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. 



இவ்விழாவில் கோவை மாவட்டம் கூடலூர் திமுக நகர செயலாளராக பணியாற்றி வரும் அ.அறிவரசுக்கு கழகத்தின் சார்பில் சிறந்த நகர செயலாளருக்கான விருதினை தமிழக முதலமைச்சரும், கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின்  விருது வழங்கி கவுரவித்தார். 

விருது பெற்று நகரப் பகுதிக்கு திரும்பிய அ.அறிவரசுக்கு கோவை வடக்கு மாவட்டம் கூடலூர் நகராட்சி, நெ.4 வீரபாண்டி பேரூராட்சி திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கும் வண்ணம் வீரபாண்டி பிரிவு அருகில் சிறப்பு வரவேற்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. 

இதில் திரளான பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆளுயுர ரோஜா பூ மாலை, சால்வைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்து வரவேற்பு அளித்தார்கள். 

இதில் ஒரு நிகழ்வாக விருது பெற்ற நகர செயலாளருக்கு வரவேற்பு அளிக்க வந்த மாற்றுத்திறனாளியுடன் அருகில் அமர்ந்து தனது வரவேற்பை ஏற்றுக்கொண்டு மேலும் விருது பெற ஒத்துழைப்பு அளித்த கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்து பெருமிதம் கொண்டார். 

இந்நிகழ்வில் கோவை வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அந்தோணி ராஜ், கூடலூர் துணைத்தலைவர் ரதி ராஜேந்திரன், வீரபாண்டி பேரூர் கழக செயலாளர் சுரேஷ், வீரபாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் பத்மாவதி துணை தலைவர் இனியராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் அணி து.தலைவர் பன்னீர்செல்வம், காரமடை அரங்கநாதர் கோவில் அறங்காவலர் குழு நிர்வாகி குணசேகரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துடன் சிறப்பு வரவேற்பு அளித்திருந்தார்கள்.

No comments

Thank you for your comments