அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளையே துணை முதல்வராக அறிவிக்கலாம் - அமைச்சர் தா.மோ.அன்பரசன்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரத்தில் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி திமுக பவள விழா பொதுக்கூட்டம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்தில் தோழமைக் கட்சிகளை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் திமுக தலைவர்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து துறை அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
கூட்டத்தில் சுமார் 50,000 பேர் பங்கேற்கும் வகையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக்கு பின்னர் அவர் செய்தியாளரிடம் தெரிவிக்கும்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நாளைய துணை முதல்வராக ஆகும் வாய்ப்பு அறிவிக்கப்படலாம் நாங்கள் தயாராகவே இருக்கிறோம் அல்லது காஞ்சிபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துணை முதல்வராக அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் அமைச்சர் தாமு அன்பரசன் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments