காஞ்சிபுரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
காஞ்சிபுரம், செப்.19:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மடம் தெருவில் மஞ்சள் நீர்க் கால்வாய் செல்லும் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன.இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என செவ்வாய்க்கிழமை தோறும் காஞ்சிபுரத்தில் நடைபெறும் அமைச்சர் தா.மோ.அன்பரசனின் குறை தீர்க்கும் கூட்டம் மற்றும் உள்ளாட்சிகளுக்கான குறை தீர்வு மன்றம் ஆகியனவற்றில் அப்பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் புகார் செய்திருந்தார்.இப்புகாரின் பேரில் ஜெசிபி இயந்திரம் மூலம் மஞ்சள் நீர்க்கால்வாயை ஆக்கிரமித்திருந்த பகுதிகள் அகற்றப்பட்டன.
காஞ்சிபுரம் மாநகராட்சி உதவி ஆணையாளர் எம்.இளம்பருதி,உதவித் திட்ட அலுவலர் கே.சுரேஷ்,விஷ்ணுகாஞ்சி காவல்துறை மற்றும் வருவ4ய்த்துறை ஆகியோர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்பார்வையிட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
No comments
Thank you for your comments